மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இன்று வரை மேற்கொளளப்பட்ட நடவடிக்கையின்போது 159 சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மூன்றரை இலட்சம் ரூபா அபராதமும் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் தொடர்ச்சியான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 159பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவற்றில் 143 முறைப்படுகளுக்கு நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 143 வழக்குகளுக்கும் மூன்றரை இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.மேலும் 15 வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன.
கசிப்பு உற்பத்தி,சட்ட விரோதமான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை,சட்ட விரோத மதுபான விற்பனை,சட்ட விரோதமாக சிறுவர்களுக்கு புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்தல் உட்பட பல்வேறுபட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM