தமிழக விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்த அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி இராஜினாமா செய்திருக்கிறார். அவர் வகித்து வந்த துறையை அமைச்சர் கே ஏ செங்கோட்டையனிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்த கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அரசு தலைமை சட்டத்தரணி விஜய் நாராயண் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மேலும் மூத்த அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி ஆகியோருடனும் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை ஏற்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தன்னுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் நடத்த சட்டபேரவைத் தேர்தலில் ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். பாலகிருஷ்ண ரெட்டி. இதுவரை நடந்த தேர்தல்களில் ஓசூர் தொகுதியில் திராவிட கட்சிகள் வென்றதில்லை. அதனால் ஓசூர் தொகுதியில் முதன் முறையாக அ.தி.மு.க வெற்றிப் பெற்றதால் வெற்றிப் பெற்ற பாலகிருஷ்ண ரெட்டிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இவருக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். முதலில் கால்நடை துறை அமைச்சராக இருந்தாலும். பிறகு இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
“அமைச்சர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்து பாலகிருஷ்ண ரெட்டி அளித்துள்ள கடிதம் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பொறுப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையனிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ”என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே தற்போது நடைபெற்று வரும் சட்டபேரவைத் கூட்டத்தொடரில் காலையில் அமைச்சராக பங்குபற்றி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சராக பதிலளித்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற உத்தரவின் காரணமாக மாலையில் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM