ஏமனில், அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத தளபதி பலியானார்.
ஏமனில், அமெரிக்க இராணுவப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் அல்கெய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜமால் அல்-படாவி உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின.
இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் தற்போது அந்த தகவலை அமெரிக்க இராணுவ தலைமையகமான உறுதி செய்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க இராணுவத் தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஏமனின் மரிப் மாகாணத்தில் உள்ள அல்-கொய்தா தீவிரவாதிகளின் நிலைகள் மீது கடந்த முதலாம் திகதி அமெரிக்க போர் விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின. இதில் ‘யுஎஸ்எஸ் கோல்’ போர்க்கப்பல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்-கொய்தா பயங்கரவாத தளபதி ஜமால் அல்- படாவி கொல்லப்பட்டார்.
மேலும் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், “யு.எஸ்.எஸ்.கோல்’ போர்க்கப்பல் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நமது கதாநாயகர்களுக்கு நம்முடைய சிறப்பான இராணுவம் நீதியை வழங்கிவிட்டது. நமது வீரர்களை கொன்ற பயங்கரவாதி ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டுவிட்டார். அல்-கொய்தாவுக்கு எதிரான நம்முடைய போர் தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM