உத்தியோகபூர்வ விஜ யம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை சீனாவிற்கு செல்லவுள்ளார். இதன் போது துறைமுக நகர் திட்டத்தின் முன்னெடுப்புகள் உள்ளிட்ட சீனாவின் முதலீடுகள் தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களில் அவர் ஈடுப்படவுள்ளதாக தெரிகின்றது.
எதிர்வரும் 6 ஆம் திகதி புதன் கிழமை மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக சீனாவின் முதலீகளை இலங்கைக்கு கொண்டு வருதல் மற்றும் சீன அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்க கூடிய புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பிரதமர் இதன்போது கலந்துரையாட உள்ளார்.
இலங்கையுடன் மீண்டும் வலுவான உறவுகளை கட்டியெழுப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயம் உதவும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹோங் லீ தெரிவித்துள்ளார். சீன தலைவர்கள் இலங்கை பிரதமரின் வருகை தொடர்பில் உற்சாகத்துடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சீன அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டத்தை மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் சீன அரசாங்கத்தினால் கொழும்பில் கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட ஹோட்டல் திட்டங்கள் உள்ளிட்ட பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் சீன விஜயத்தின் போது கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM