வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.
இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
அத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னான் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிகின்றது.
எனவே இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM