இம்முறை சிவனொளிபாத மலை பருவக்காலத்தில் சுகாதார சேவை விசேடமாக இயங்கவுள்ளது.
24 மணிநேரமும் இவ் வைத்திய சேவை நல்லத்தண்ணி பொது சுகாதார அதிகாரிகள் காரியாலயத்தில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்று வருகின்றது என நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சர் வைத்திய அதிகாரி சேனா தலகல தெரிவித்தார்.
அவர் மேலும் கலந்துரையாடுகையில் நேற்று முதல் 2 அம்புலேன்ஸ் வண்டிகளும், 4 வைத்தியர்களும் தற்போது கடமையில் உள்ளதாகவும் இதனால் சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளுக்கு சுகாதார சேவையை பெற்றுக்கொடுக்கவே இந்த சுகாதார சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இம்முறை இந்த சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வார கடைசி நாட்களிளும்,நீண்ட விடுமுறை நாட்களிலும் சிவனொளி பாத மலையை தர்சிக்க அதிகளவு யாத்திரிகள் வந்து செல்வதால் உள்நாட்டு,வெளிநாட்டு யாத்திரிகள் நலன் பேன இச்சேவை 24மணி நேரமும் இடம் பெறும்.
அதற்கான சேவைக்கு அதிகளவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சேன தலகல தெரிவித்தார். அங்கு இடம் பெறும் சேவையானது காயமடைந்தோருக்கு மருந்து கட்டுதல் சுகவீனமுற்றோருக்கு மருந்து வுழங்கள்,மேலதிக சிகிச்சை தேவைபடின் அம்புலேன்ஸ் வண்டி மூலம் அருகில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுதல் முதலுதவி செய்தல் போன்ற விடயங்கள் இடம் பெரும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM