(ஆர்.விதுஷா)
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபகஷவிற்கு எதிராக நிரந்தர நியாய மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பத் அபேகோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பத் ஜனகீ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டடது.
மெதமுலன டீ. ஏ. ராஜபக்ஷ நூதன சாலை நிர்மாணப்பணிகளின் போது 33 மில்லியன் ரூபாய் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .
ஆயினும் நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ளமையின் ; காரணமாக மேற்படி வழக்கு மீதான விசாரணைககள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM