ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரசியல் கருத்தரங்கும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 6/1) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
தற்போது பிரான்சில் வசிக்கும் வி.ரி இளங்கோவனின் ஈழத்து மண் மறவா மைந்தர்கள், என்வழி தனிவழி அல்ல, ஔிக்கீற்று, பாரதிநேசன் வீ.சின்னத்தம்பி எழுதிய ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் , பத்மா இளங்கோவனின் செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள் என்ற நூல்களே அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.
பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா வாழ்த்துரையையும் கருணாகரன், தி.சிறீதரன் ( சுகு) , கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் நூல் அறிமுக உரைகளையும் இளங்கோவன் ஏற்புரையையும் நிகழ்த்துவர்.
இரண்டாவது அமர்வாக ' தோழர் என்.சண்முகதாசன் வழிவந்த சிந்தனைகளும் சமகாலப் பொருத்தப்பாடும் ' என்ற தலைப்பிலான அரசியல் கருத்தரங்கு இடம்பெறும்.
எம்.ஏ.சி.இக்பால் தலைமையிலான இந்த கருத்தரங்கில் கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தைச் சேர்ந்த சட்டத்தரணி இ.தம்பையா, டபிள்யூ.சோமரத்ன, பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றுவர். இலங்கை முற்போக்கு மக்கள் இயக்கம் இரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM