வீடு புகுந்து கொள்ளையிட்டவர் கிராமவாசிகளால் மடக்கிப்பிடிப்பு

Published By: Daya

03 Jan, 2019 | 02:51 PM
image

புத்தளம் - உனவட்டுன பிரதேசத்தில் வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை கிராமத்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புத்தளம் - உனவட்டுன பிரதேசத்திலுள்ள வீடொன்றில் உட்புகுந்து பொருட்களை திருடிவிட்டு மற்றொரு வீட்டில் புகுந்து கை பையை திருடிவிட்டு இன்னமொரு வீட்டுக்குள் புக முற்பட்டபோது குறித்த சந்தேக நபர் கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் புத்தளம் பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் உட்பட மற்றொரு நபர் திருட்டு சம்பத்தில் தொடர்புபட்டுள்ளாரெனவும் அத்துடன் வேறொரு சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வெல்லவாய பகுதியை சேர்ந்த  19 வயதான நபரே இவ்வாறு சந்தேகத்தின் கைது செய்யப்பட்டவர்.

குறித்த சந்தேகநபர்  இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55