(ஆர்.விதுஷா)
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - தொட்டுபல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10.35 மணியளவில் காரில் பயணித்த இனம் தெரியாத நபர்கள் இருவரால் மேற்படி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் 57 வயதுடைய களுகார , சிது மிண ஹெட்டல் , களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த தொம்பகஹ பதிரணகே பற்ரிக் பீரிஸ் எனப்படுபவர் என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
துப்பக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை களுத்துறை வடக்கு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM