உண்­மையை கண்­ட­றி­யுங்கள்

Published By: Raam

01 Apr, 2016 | 08:37 AM
image

யாழ்ப்­பாணம் சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மற­வன்­புலவு வள்­ளக்­குளம் பகு­தியில் நேற்­று­முன்­தினம் தற்­கொலை அங்­கி­யொன்று உள்­ளிட்ட வெடிபொருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­மை­யா­னது நாட்டு மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­க­ளையும் ஒரு­வி­த­மான பதற்­றத்தையும் தோற்­று­வித்­தி­ருந்­தது. குறித்த வீட்டில் கஞ்சா உட்­பட போதைப்­பொ­ருட்கள் இருப்­ப­தாக சாவ­கச்­சேரி பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்­க­மைய அந்த வீட்டை சோத­னை­யிட்­ட­போதே தற்­கொலை அங்கி மற்றும் கிளைமோர் ரக குண்­டு­களை வெடிக்க வைக்கும் பட்­ட­ரிகள் தோட்­டாக்கள், ஐந்து சிம் அட்­டைகள் உள்­ளிட்ட பொருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

அதே­நேரம் இவற்றை மறைத்து வைத்­தி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் 30 வய­து­டைய குடும்­பஸ்தர் ஒரு­வரும் கிளி­நொச்சிப் பகு­தியில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார். வெடி பொருட்கள் மீட்­கப்­பட்­டுள்ள குறித்த வீட்டை சுற்­றி­வ­ளைத்­த­போது அங்கு இருந்­த­தாக கூறப்­படும் பெண்­ணொ­ரு­வ­ரையும் பொலிஸார் விசா­ரித்­தி­ருந்­தனர். இத­ன­டிப்­ப­டை­யி­லேயே குறித்த சந்­தேக நபரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இந்த தற்­கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் தகவல் வெளி­யிட்­டி­ருந்த பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர இது தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் கைது செய்­யப்­பட்­டவர் முன்னாள் புலி உறுப்­பினர் என்றே சந்­தே­கிக்­கின்றோம். எனினும் அதனை உறு­தி­யாக கூற­மு­டி­யாது. இந்த தற்­கொலை அங்கி மற்றும் வெடி­பொ­ருட்கள் அவ­ருக்கு கிடைத்த விதம் மற்றும் அவர் அதனை தன்­னிடம் வைத்­தி­ருந்­த­மைக்­கான காரணம் என்­பது தொடர்பில் தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த பொருட்கள் யுத்­தத்தின் பின்னர் கைவி­டப்­பட்­ட­தாக இருக்­கலாம் என நம்­பு­கிறோம். எனினும் இது குறித்து இறு­தி­நி­லைப்­பாட்­டுக்கு வர முடி­ய­வில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இதே­வேளை இவ்­வாறு தற்­கொலை அங்கி மற்றும் வெடி­பொருட்கள் மீட்­கப்­பட்­ட­மை­யா­னது நேற்­று­முன்­தினம் மக்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் அது­தொ­டர்பில் கருத்து வெளியிட்ட பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி, இந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு பாது­காப்பு அமைச்சு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­மென தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் இது­போன்ற சம்­ப­வங்­க­ளினால் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தாக கூற முடி­யாது. கடந்த காலங்­க­ளிலும் இவ்­வா­றான வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இதனால் தேசிய பாது­காப்­புக்கு எந்­த­வி­த­மான அச்­சு­றுத்­த­லு­மில்லை. இந்த சந்­தர்ப்­பத்தில் பொலி­ஸா­ருக்கு தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றோம். யுத்­த­மொன்று நடை­பெற்ற நாட்டில் இவ்­வாறு பொருட்கள் மீட்­கப்­ப­டு­வது வழ­மை­யான­தாகும். எனவே இது தொடர்பில் மக்கள் எந்­த­வ­கை­யிலும் அச்­சம்­கொள்ளத் தேவை­யில்லை எனவும் பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

உண்­மையில் இவ்­வா­றான ஒரு சம்­பவம் இடம்­பெற்­ற­வுடன் அர­சியல் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் மக்­களை அச்­சத்தின் விளிம்­புக்கு கொண்டு செல்­லாமல் உண்­மையை கண்­ட­றிந்து மக்­களை தெளிவு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மாறாக மக்கள் அச்­ச­ம­டையும் வகையில் கூற்­றுக்­களை வெளி­யி­டு­வதை அனைத்து தரப்­பி­னரும் தவிர்த்­து­விட வேண்டும். நேற்­று­முன்­தினம் இந்த தற்­கொலை அங்கி மற்றும் வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­ட­பின்னர் கொழும்பில் செய்­தி­யாளர் மாநாட்டை நடத்­திய பொது எதி­ரணி தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதற்கு அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற­வேண்டும் எனவும் கடும் குற்­றச்­சாட்­டு­க்களை முன்­வைத்­தது.

அதா­வது சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்­கி­களும் வெடி­பொ­ருட்­களும் இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் துளிர் விட்­டுள்­ள­மையை வெளிப்­ப­டுத்தி விட்­டது. முன்னாள் போரா­ளி­களின் விடு­தலை, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­க­வுள்­ளமை மற்றும் பாது­காப்பு படை­களின் முகாம்­களை அகற்­றி­யமை போன்ற விட­யங்­களே தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாகும். இதற்கு தற்­போ­தைய அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் உண்­மை­களை மறைத்து நாட்டு மக்­க­ளுக்கு போலி­யான விட­யங்­களை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது. சாவ­கச்­சே­ரியில் மீட்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் தவ­றான தக­வல்­க­ளையே அர­சாங்கம் வெளி­யிட்­டுள்­ளது. கொழும்பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த பயங்­க­ர­வாத சதி திட்டம் தொடர்பில் நியா­ய­மான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வ­டைந்த பின்னர் இவ்­வாறு யுத்தம் நடை­பெற்ற பல பிர­தே­சங்­களில் ஆயு­தங்­களும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்டு வந்­தன. அந்­த­வ­கை­யி­லேயே குறு­கிய கால இடை­வெ­ளியின் பின்னர் தற்­போது மீண்டும் சாவ­கச்­சேரி பகு­தியில் ஆயு­தங்­களும், வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நீண்­ட­கால யுத்­த­மொன்று நடை­பெற்ற நாட்டில் இவ்­வாறு வெடி­பொ­ருட்கள் ஆயு­தங்கள் மீட்­கப்­ப­டு­வது சாதா­ரண விட­ய­மாகும்.

மாறாக இந்த விட­யத்தை பெரி­து­ப­டுத்தி நாட்டு மக்கள் மத்­தியில் எவரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கக்­கூ­டாது. அத்­துடன் இந்த சம்­ப­வத்தை வைத்து சுய அர­சியல் இலாபம் தேடும் முயற்­சியில் எந்­த­வொரு தரப்­பி­னரும் ஈடு­ப­டக்­கூ­டாது. இவ்­வா­றான சம்­ப­வங்­களை கார­ண­மாகக் கொண்டு நாட்டில் நில­வு­கின்ற சமா­தானம் மற்றும் அமை­தியை சீர்­கு­லைப்­ப­தற்கு எவரும் முயற்­சிக்­கக்­கூ­டாது. குறிப்­பாக தற்­போது இவ்­வாறு தற்­கொலை அங்­கி­யும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் அவை தொடர்பில் பாது­காப்­பு­த் த­ரப்­பினர் முழு­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு உண்­மையை கண்­ட­றிய வேண்டும். இந்­த­வி­டயம் தொடர்பில் சந்­தே­க­ந­பரும் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து விரைவில் உண்­மையைக் கண்­ட­றிய வேண்டும்.

மீட்­கப்­பட்ட பொருட்­க­ளுக்­கி­டையில் காணப்­பட்ட தற்­கொலை அங்­கி­யா­னது சிங்­கள பத்­தி­ரி­கை­யொன்றினால் பொதி செய்­யப்­பட்டு வைக்­கப்­பட்­டி­ருந்­தமை இங்கு கவனம் செலுத்த வேண்­டிய விட­ய­மாகும். இவ்­வாறு பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு உண்­மையை கண்­ட­றிந்து மக்­களை பாது­காப்­பு­த்த­ரப்­பினர் தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். தாம­த­மின்றி இதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். பாது­காப்பு தரப்­பினர் ஏற்­க­னவே பல்­வேறு கோணங்­களில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அத­ன­டிப்­ப­டையில் விரைவில் உண்மை கண்­ட­றி­யப்­ப­டு­மென மக்கள் நம்­பு­கின்­றனர்.

இதே­வேளை மன்னார் மாந்தை மேற்கு பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட இலுப்பை கடவை கம­நல சேவை நிலை­யத்­திற்கு சொந்­த­மான காணியின் பின்­ப­கு­தி­யி­லி­ருந்தும் ஒரு­தொ­குதி வெடி­பொ­ருட்கள் நேற்று முன்­தினம் மீட்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­கு­தியில் பெரு­ம­ள­வான ஆயு­தங்கள் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இலுப்பைக் கடவை பொலி­ஸா­ரினால் மன்னார் நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து மன்னார் நீதிவான் முன்­னி­லையில் அடை­யாளம் காணப்­பட்ட பகு­தியில் புதைக்­கப்­பட்­டி­ருந்த பெருந்­தொ­கை­யான வெடி­பொ­ருட்கள் மீட்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து இந்த வெடிப்­பொ­ருட்­களை செய­லி­ழக்கச் செய்யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் மக்­க­ளுக்கு ஆபத்­துக்கள் ஏற்­ப­டாத வகையில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும் நீதிவான் உரிய தரப்­பி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இவ்வாறு அடிக்கடி ஆயுதங்களும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இவ்வாறு பல பிரதேசங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அதன்பின்னர் தற்போது இவ்வாறு கிடைக்கப் பெறுகின்ற தகவல்களுக்கமைய வெடிபொருட்கள் மீட்கப்படுகின்றன. எனவே அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த விடயம் தொடர்பில் சற்று ஆழமாக கவனம் செலுத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்களை பயன்படுத்தி சுய அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

விசேடமாக இந்த சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் பொலிஸ் தரப்பினர் விரிவான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை கண்டறிந்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும். அதனைவிடுத்து மக்களை குழப்பி நாட்டில் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58