மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று மலையக மக்கள் முன்னணியின் பதுளை சமூக மேம்பாட்டு பணியகத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டன.
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், மாவட்ட தலைவர்கள், தோட்டக்கமிட்டி தலைவர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்புகள் எனபலரும்இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வின் விசேட அம்சமாக சிறந்த ரக மா மரக் கன்றுகள் மக்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வினை நிகழ்வின் பிரதம விருந்தினரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM