(எம்.மனோசித்ரா)
ஜனநாயக நாடொன்றில் நிதி மற்றும் ஊடகத்துறை என்பன ஒரே அமைச்சின் கீழ் செயற்படுவது சாத்தியமற்றதாகும். நாட்டில் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகள் காணப்படுகின்ற போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகங்களை கறுப்பு ஊடகம் என விமர்சித்துக் கொண்டிருக்கின்றார். அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஊடகத்துறை காணப்படுவது ஊடகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
கூட்டு எதிர்கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் மங்கள சமவீரவுக்கு எதிராக நான் வழக்கு தொடரவுள்ளேன். காரணம் ஜனநாயக நாட்டில் நிதி மற்றும் ஊடகத்துறை ஒரு அமைச்சின் கீழ் செயற்பட முடியாது. எனவே ஊடகங்களை கறுப்பு ஊடகம் என விமர்சிப்பதையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் இந்த வருடத்தில் மங்கள சமரவீர கைவிட வேண்டும்.
அமைச்சரவை மற்றும் அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகின்றது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM