இரண்டு இலட்சம் ரூபா பெருமதியான பித்தளையினால் செய்யபட்ட விநாயகர் சிலை திருடப்பட்ட சம்பவம் ஒன்று தலவாக்கலையில் இடம்பெற்றுள்ளது.
தலவாகலை சென்கிளயர் தோட்டபகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றை உடைத்து பித்தாளையினால் உருவாக்கபட்ட இரண்டு இலட்சம் பெருமதியான விநாயகர் சிலை ஒன்றை இனந் தெரியாதவர்களால் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் தலவாகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றைய முன்தினம் இரவு நெரத்தில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்று காலை குறித்த ஆலயத்திற்கு பொருப்பான புசகர் ஆலயத்திற்கு வந்த பொழுது ஆலயத்தின் கதவு உடைக்கபட்டு ஆலயத்தில் இருந்து சிலை களவாடபட்ட சம்பவம் தொடர்பில் ஆலய நிறுவாகத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து ஆலய நிருவாகத்தினர் தலவாகலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த தலவாகலை பொலிஸார் பொலிஸ்மோப்பநாய் மற்றும் தடையவியல் பொலிஸார் ஆலயத்திற்கு வரவலைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருட்டுச்சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யபடவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனவே குறித்த விநாயகர் சிலை தொடர்பில் தகவல் கிடைத்தவர்கள் அறுகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் மற்றும் தலவாகலை பொலிஸ்நிலையத்திற்கும் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM