வட மாகாணத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை விட அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
39 ஆயிரத்து 64 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 1,411 குடும்பங்களைச் சேர்ந்த 4,515 பேர் 14 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமே அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. இம் மாவட்டத்தில் 25,581 குடும்பங்களைச் சேர்ந்த 78,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 104 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 923 பேரும், யாழில் 4, 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 642 பேரும், மன்னார் மாவட்டத்தில் 39 குடும்பங்களைச் சேர்நத 141 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் அனர்த்தின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவான வீடுகளும் சேதமடைந்துள்ளன. இம் மாவட்டத்தில் 388 வீடுகள் முழுமையாகவும், 2225 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அதே போன்று முல்லைத்தீவில் 86 வீடுகள் முழுமையாகவும், 2297 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM