சீன நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு ; 5 பேர் பலி

Published By: Digital Desk 4

29 Dec, 2018 | 04:14 PM
image

சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்திலுள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

அதன் போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கியுள்ள மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சுரங்க உரிமையாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17