நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அறவிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள வருமானமற்று காணப்படுகின்றனர். இவர்களில் பலர் முகாம்களில் தங்கியுள்ள நிலையில் அவர்களிடம் சென்று நுண் கடன் அறிவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அத்தோடு வெள்ளத்தினால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகளினால் பெறப்பட்ட கடன்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதனையடுத்தே பிரதமர் தற்காலிகமாக நுண் கடன்கள் மற்றும் வங்கிகடன்களை தற்காலிகமாக அறவிடுவதற்கு தடை விதிக்குமாறு பணித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM