எகிப்தில் பிரமிட்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 வியட்நாம் சுற்றுலாப்பயணிகள் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
எகிப்தின் தலைநகரிற்கு அருகில் பிரமிட்கள் அதிகம் காணப்படும் கிஜா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் பேருந்தை இலக்குவைத்து வீதியோராமாக வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததன் காரணமாகவே நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு காரணமாக பத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் காயமடைந்துள்ளனர்
இதுவரை இந்த தாக்குதலிற்கு எவரும் உரிமை கோரதஅதேவேளை எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.
பிரமிட்களை பார்வையிடுவதற்காக சென்று கொண்டிருந்தவேளையே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் பிரமிட்கள் காணப்படும் பகுதியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிற்காக சென்று கொண்டிருந்தோம்,திடீர் என குண்டுசத்தமொன்று கேட்டது அது பயங்கரமாக காணப்பட்டது அனைவரும் அலறினார்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து எரிந்துகொண்டிருந்ததையும் அதிலிருந்தவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டதையும் பார்த்ததாக தெரிவித்துள்ள முச்சக்கர வண்டி சாரதியொருவர் ஒரு பயணி இறந்த நிலையில் காணப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM