(நா.தினுஷா)
நாட்டின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்கட்சிதலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
மேலும் பொது தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் இல்லை. பொது தேர்தலை நடத்த போவதும் இல்லை. ஆனால் விரைவில் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போர்த்துக்கேயர் ஆட்சி புரிந்தப்போது யாழ்ப்பாண இராச்சியம் , கண்டி இராச்சியம், கோட்டை , சித்தாவக்கை என நாட்டில் பல்வேறு இராச்சிய பிரிவுகள் காணப்பட்டன. வேறப்பட்ட இராச்சியத்தை வெள்ளையர்களே ஒன்றுப்படுத்தினர். அந்த ஒருமித்த நிலை தொடர்ந்து நாட்டில் நிலவ வேண்டும்.
எனவே மொழிகளுக்கான முக்கியத்துவத்தை புரிந்து அவற்றுக்கு மக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் நிலையற்றது என்பதால் கிடைக்கபெரும் குறுகிய காலத்தில் தேசிய மொழிகளுக்கிடையில் ஒருங்கிணைவை ஏறபடுத்துவதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM