(இரோஷா வேலு)
இலங்கையானது மெல்ல மெல்ல போதைப்பொருள் வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றம் கண்டு வருவதை கவனத்தில் கொண்டு போதைப்பொருள் தடுப்பு பணிகளில் கடுமையாக கடைப்பிடிக்குமாறு அனைத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பொலிஸாரின் பதவி உயர்வுகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போதைப்பொருள் வர்த்தகர்களின் கேந்திர நிலையமாக மாறி வரும் இலங்கையை அந்த பாதையிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்வருடம் அதிகளவான போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் பல முறியடிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்குமாறு ஜனாதிபதியும் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதன்போல், போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழித்து எமது நாட்டு இளைஞர்களை பாதுகாக்குமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் பொலிஸாரின் கிறிஸ்மஸ் விழாவின் போது கோரிக்கை விடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM