இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த வித முன்னேற்றமும் இல்லையென பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முகமது பைசல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட முகமது பைசல்,
“காஷ்மீர் விவகாரத்திற்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எனினும் இந்தியாவுடனான பிரச்சினைகளை தீர்ப்பதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கர்தார்பூர் வழித்தடத்தை ஏற்படுத்தியது மாத்திரமே இரு நாடுகளுக்கிடையில் சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடனான தொடர்பை மேம்படுத்த கடந்த செப்டம்பர் மாதம் அந் நாட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். ஆனாலும் அதற்கு இந்தியா எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனால் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் இரு நாடுகளும் தோல்வியைத் தழுவியுள்ளன என்றே கூறலாம்.
இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு மறுத்து வந்த போதிலும் கர்தார்பூர் வழித்தடத்தை அமைப்பதற்கான பணிகளை பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது” என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM