(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் தேசிய அமைச்சாக காணப்படும் கல்வியமைச்சில் தமிழ் பிரதிநிதி அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து கல்வி இராஜாங்க அமைச்சராக தமிழரை நியமித்துள்ளது. எமது ஆட்சியில் இவ்வொருமைப்பாடு தொடரும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஷ்வரன் இன்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய அரசாங்கத்தில் கல்வி துறையில் பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. நவீன கற்கை துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான நோக்கம். ஒரு நாடு கல்வித்துறையில் முன்னேற்றமடைந்தால் அங்கு ஏனைய துறைகள் தாமாகவே வளர்ச்சியடையும். இதற்கு நாட்டு மக்கள் அரசியல் விவகாரங்களை தவிர்த்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM