சீரற்ற கால நிலையினால் தொடர்ந்து கொண்டிருக்கும் கடும் மழையினையடுத்து பெரும் மண் மற்றும் கற்பாறைகள் சரிவு அபாயம் ஏற்பட்டதினால் ரோபேரி தெகிகலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளனர்.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் தென்பட்டதால் நேற்று இரவு பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்றுள்ளனர்.
அப்பகுதியல் வாழும் 115 பேரைக் கொண்ட 20 தொழிலாளர் குடும்பங்கள்தெகிகலை கிறிஸ்தவ தேவாலய மண்டபத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இவர்களுக்கான உலர் உணவுவகைகள் மற்றும் இதர வசதிகளை பகுதி பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட பெருந்தோட்ட வரிசைக் குடியிறுப்பு தொகுதியை அண்மித்த கற்பாறைகளுடனான மண்மேடு சரியும் அபாயம் ஏற்பட்டிருப்பதினாலேயே தொழிலாளர் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM