மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதி ஓடையிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் பாலமுனை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய துவிச்சக்கரவண்டி திருத்துனர் என, அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வேலை முடித்து வரும்போது ஓடையில் தவறி விழுந்து இவர் மரணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM