வணிக ரீதியாக திமிங்கிலங்களை வேட்டையாடுவதை அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் யோஷிஹிடே சுகா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
வணிகரீதியான திமிங்கிலப் பிடிப்பு ஜப்பானின் தேசிய கடற்பரப்பிலும், பொருளாதார மண்டலங்களிலும் மட்டுமே நடக்கும்.
இதன் விளைவாக, அண்டார்க்டிக் பகுதியிலும், தென் கோளப் பரப்பிலும் திமிங்கில வேட்டையாடுவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ளும்.
சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையம் திமிங்கிலங்களின் எண்ணிக்கையை பாதுகாப்பது என்ற ஒரே இலக்கில் மட்டுமே குறியாக இருப்பதாகவும், அதன் மற்றொரு இலக்கான நீடித்த நிலைத்த வணிகரீதியிலான திமிங்கிலப் பிடிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது என்பதற்கு அது போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் ஜப்பான் அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986 ஆம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம்.
1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒருவர் திமிங்கிலங்களை உண்பது ஜப்பான் பண்பாட்டின் ஓர் பகுதி என்று தெரிவித்துள்ளார்.
வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிக்கப்போவதாக ஜப்பான் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு சில நாள்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதனால் மோசமான பின் விளைவுகள் இருக்கும் என்று சர்வதேச உயிரினப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM