அதி நவீன ஹைப்பர் சொனிக் ஏவுகணையின் இறுதிக் கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ள ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உலகிலேயே இந்த புதுவித தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஏவுகணை குறித்து மேலும் தெரிவித்த புட்டின்,
உலகிலேயே இந்த புதுவித தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஷ்யா என்பதால் பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டுக்கும் இது மிக முக்கிய நிகழ்வு.
இந்த புதுமையான அமைப்பு அணு ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது என்றும், இது அடுத்த ஆண்டு ராணுவ சேவையில் இணையும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் ஒலி வேகத்தைப் போல 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM