ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் “டீல்” போடும் சதிகாரர் ஒருவரை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தேன். சதிகாரர் தொடர்பில் சாட்சியங்கள் என்னிடம் உள்ளன என அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் நலன்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கைத்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர செவ்வாய்க்கிழமை கர்தினால் மல்கம் ரஞ்சித் பேராயரை ஆயர் இல்லத்தில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்தொழித்து பிளவுபடுத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் டீல் போட்டு தொடர்புகளை பேணிவரும் சதிகாரர் ஒருவரை அலரிமாளிகையின் வாசலில் சந்தித்தேன்.
ஐக்கிய தேசிய கட்சியின் இரகசியமான தொடர்புகளை பேணும் ஒரு குழுவினர் எமது கட்சியை அழிக்க திட்டமிடுகின்றார்.
இது தொடர்பான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன. நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்கள் சந்திப்புக்களை நாடு முழுவதும் நடத்தினோம்.
அவற்றில் ஒரு சில கூட்டங்களை தவிர ஏனைய கூட்டங்களுக்கு 65000க்கு மேற்பட்டோர் வருகை தந்தனர்.
இரண்டொரு கூட்டங்களுக்கு ஒரு சிலருக்கு மதுவை வழங்கி குழப்புவதற்காக திட்டமிட்டு குழுக்களை அனுப்பியிருந்தனர்.
இவ்வாறான குழப்பும் கூட்டத்தினர் அனைத்து இடங்களிலும் உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் “டீல்” போடுபவர்களுக்கு எமது கட்சியை பிளவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
இவர்கள் தான் சுதந்திரக் கட்சியை சீரழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM