எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜனபெரமுனவும் இணைந்து போட்டியிடுவதை குழப்புவதற்கான முயற்சியில் ஈடுபடும் அமைப்பாளர்கள் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவிரும்புவர்கள் கட்சியிலிருந்து விலகிய பின்னர் அதனை செய்யலாம் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்துள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு என திட்டமொன்றை முன்வைக்குமாறு கோரியுள்ளனர்.
இது குறித்த தங்கள் அதிருப்தியை அவர்கள் பொதுச்செயலாளர்களிடம் வெளியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM