சந்திரசேகர் ராவ், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கிய பின்னர் அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
“தி.மு.கவின் ஆலோசனை க் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மக்களிடம் செல்வோம்.
மக்களிடம் சொலவோம்,மக்கள் மனங்களை வெல்வோம் என்கிற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சி பகுதிகளுக்கு சென்று ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி என்று குற்றம் சாட்டும் பிரதமர் மோடி,அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி எடுப்பதாக எங்களுக்கு செய்தி வருகிறது.அது கொள்கை கூட்டணியா? அல்லது கொள்ளை கூட்டணியா? என்பது தான் என்னுடைய கேள்வி. இன்னும் சொல்லப்போனால் இதே ஒ.பி. எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரையும் சேர்த்துவைக்க முயற்சித்தவர்,கையைக் குலுக்கு அவர்களை சேர்த்து வைத்தவர் மோடி. இதற்கு இது தான் பதில். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் நான் திமுகவின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளேன்.
நான் வெளிப்படுத்திய உணர்வை யாரும் எதிர்க்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து பின்னால் அறிவித்திருக்கலாம் என்ற கருத்தே நிலவுகிறது. அப்படி சொல்பவர்களும் விரைவில் அப்படி பேசக்கூடியவர்களும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு தி.மு.க சொன்ன அந்த உணர்வுடன் முழங்குவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சந்திரசேகர் ராவ் மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியதும் அது குறித்து தெரிவிக்கிறேன். எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் இந்திரா காந்தியே, அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.அது ஜனநாயகம், ஆனால் இன்றைய தினம் எமர்ஜென்ஸியை விட மோசமான சர்வாதிகார ஆட்சியை மோடி நடத்தி வருகிறார்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM