ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி

Published By: Digital Desk 4

24 Dec, 2018 | 04:24 PM
image

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்ளோம். இப்பேரணினை நடத்த அரச சார்பற்ற அமைப்புக்கள், சகல அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், என எல்லோரும் எம்முடன் இணைந்து நீண்ட காலமாக காணாமல் போன எம் உறவுகளை தொலைத்து விட்டு தேடும் முயற்சிக்கு எல்லோரும் முன் வந்துள்ளோம். எனவே எமது இச்செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்டத்தின் இணைப்பாளர்.

இன்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களையும், அவர்களுக்கு பக்க பலமாக இணைந்து வலுச்சேர்க்கின்ற உறவுகளையும் சந்தித்திருந்தோம். எமது இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டு வருடத்தை நெருங்கவுள்ள நிலையில், வருகின்ற மார்ச் மாதம் ஜெனிவாவிலே மனித உரிமைக்கான 40வது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. எங்களது கோரிக்கைகளை அம்மன்றத்திலே எமது தேடலும், எமது உறவுகளின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்திருந்தோம். 

மேலும் இலங்கையிலே பல தரப்பட்ட அமைப்புக்களை சந்த்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதியையும் சந்தித்து மகஜரினை கையளித்திருந்தோம். அப்போது எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. 

எங்களுக்கான தீர்வினை பல முறைகளில் முன்வைக்கப்பட்ட போதும் இதுவரை ஐ.நா மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்படாத நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரிலாவது எங்களது கேரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசிற்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதன் மூலமாக எங்களது உறவுகளின் விடுதலையையும் எங்களுக்கான தீர்வையும் பெற்றுத்தர வேண்டும் என  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14