இந்தோனேசியாவின் சுந்தா தீவை சுனாமி தாக்கியதில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 165 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சுனாமி அனர்த்தம் நேற்று (22-12-2018) சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சுனாமி தாக்கத்திற்குள்ளான தீவான சுந்தா, இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
குறித்த பகுதியில் எரி மலையொன்று வெடித்த பின்னர் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின்னரே குறித்த சுனாமி தாக்கியதாகவும் இந்த சுனாமி அனர்த்தத்தின்போது பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த சுனாமி இந்தோனேசியாவின் பல தீவுகளையும் லம்பெக்கை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளையும் சுந்தா தீவின் பல பகுதிகளையும் தாக்கியுள்ளதாக இந்தோனேசிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM