(எம்.மனோசித்ரா)
மஹிந்த ராஜபக்ஷ 54 பேருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு துரோகம் இழைக்கவில்லை. ஆனால் சுதந்திர கட்சி உறுப்பினர்களான விஜித் விஜயமுனி சொய்சா, ஜோன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டார உள்ளிட்ட மூவரும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து கட்சிக்கு துரோகமிழைத்து விட்டனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது உறுதியாகும் என சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் றோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
சுதந்திர கட்சியிலிருந்து விலகாமல் ஐ.தே.க அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக விஜித் விஜயமுனி சொய்சா, ஜோன் செனவிரத்ன மற்றும் இந்திக பண்டார ஆகியோர் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் சு.கவின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியை நாம் எப்போதும் சுதந்திர கட்சிக்கு எதிரான கட்சியாகவே கருதுகின்றோம். அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாமையினாலேயே தேசிய அரசாங்கத்திலிருந்து விலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். இந்நிலையில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மூவரும் அவர்களுடன் இணைந்துள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாததாகும்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM