மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் நால்வர் மேற்கொண்ட உணவு தவிர்பபு போராட்டாத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மலையகப் பகுதிகள் பலவற்றிலும் தோட்ட மக்கள் ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து லிந்துலையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாள் சம்பளத்தை உயர்த்த கோரியும் இதே கோரிக்கையை முன்னிலைப்படுத்தி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் 22.12.2018 அன்று லிந்துலை மெராயா ஊவாக்கலை தோட்ட மக்கள் மற்றும் தங்ககலை தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலும், பூஜை வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர்.
அந்தவகையில் லிந்துலை ஊவாக்கலை தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை மீட்டுத்தருமாறு அழுத்தம் கொடுத்து ஊவாக்கலை ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்பு கொடிகளையும் பதாதைகளையும் ஏந்திய வண்ணம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மலையக இளைஞர்களுக்கு தங்ககலை தோட்டத்தில் தோட்ட மக்கள் குறித்த இளைஞர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படக்கூடாது எனவும், அவர்களின் கோரிக்கைகள் வெற்றிப்பெற வேண்டும் எனவும் ஆலய வழிபாடுகளிலும் ஈடுப்பட்டனர்.
தங்ககலை விநாயகர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும், கிறிஸ்தவ ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளிலும் ஈடுப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM