நாட்டின் தூரப் பிரதேசங்களிலுள்ள குறைந்த வசதிகளையுடைய விகாரைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் செயற்படும் பௌத்த புனருத நிதியத்தினால் விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
46 விகாரைகளுக்காக 195 மில்லியன் ரூபா இதன்போது அன்பளிப்பு செய்யப்பட்டதுடன், உரிய விகாரைகளின் விகாராதிபதி தேரர்களிடம் ஜனாதிபதி அவர்கள் காசோலைகளை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி எண்ணக்கருவில் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த புனருத நிதியத்தினால் 2016 ஆம் ஆண்டில் 116 மில்லியன் ரூபாவும் 2017 ஆம் ஆண்டில் 167 மில்லியன் ரூபாவும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த புனருத நிதியத்தின் கீழ் குறைந்த வசதிகளை உடைய விகாரைகள் தற்போது உரியவாறு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஜனாதிபதியின் ஆலோசனைக்கேற்ப முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர்களின் உதவியும் தொழிற்பங்களிப்பும் அந்நடவடிக்கைகளுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
காணி பிரச்சினைகள் காணப்படும் விகாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி வைப்பதன் ஊடாக அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ஜனாதிபதி அவர்களால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமரபுர சிறிசத்தம்மவங்ச மகா நிக்காயவின் அதிவண. அஹுங்கல்லே சிறி சீலவிசுத்தி மகாநாயக்க தேரர், கிழக்கு மாகாணம், தமன்கடுவ ஆகிய இரு பிரதேசங்களின் அஸ்கிரி பிரிவின் பிரதான சங்கநாயக்கர் வண. மகுரெபே ஸ்ரீ தர்மகீர்த்தி இந்ரஜோதி பஞ்ஞாசேகராபிதான நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM