(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
அடுத்த வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அத்துடன் அந்தப் பகுதி மக்களின் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கைவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரசிய குழப்ப நிலையால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை ஏற்படுத்தியவர்கள் தற்போது எதிர்க்கட்சிக்கு சென்று பதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
2007ஆம் ஆண்டு முதல் அதிகளவான நிதிகளை வெளிநாடுகளிலிருந்து கடன்களாகப் பெற்றுக்கொள்ளும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே இந்நிலைக்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM