ஐ.தே.கவின் கணக்கறிக்கை வெறுமனே அரச ஊழியர்களின் நலன் கருதியது அல்ல: மக்கள் விடுதலை முன்னணி 

Published By: R. Kalaichelvan

21 Dec, 2018 | 06:12 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசியக் கட்சியின் நிதி அமைச்சர் முன்வைத்துள்ள இடைக்கால கணக்கறிக்கை வெறுமனே  அரச ஊழியர்களின் நலன் கருதியது அல்ல என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கைவிடப்பட்ட இவர்களின் வியாபாரங்களை மீண்டும் முன்னெடுக்கும் உள்நோக்கமும் உள்ளது.அதனை நிதி அமைச்சர் சபையில் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆகவே இடைக்கால கணக்கரிக்கைக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் தெரிவித்தது. 

அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதி மற்றும் மஹிந்த ராஜபக் ஷ கூட்டணியின் சூழ்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகவே இன்று இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்வைக்க நேர்ந்துள்ளது. 

இந்த அரசியல் சூழ்ச்சி குறித்தும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கடந்த காலங்களில் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. அரசியல் அமைப்பு குறித்து மக்கள் மத்தியில் நல்லதொரு தெளிவும் ஏற்பட்டது.

 ஆகவே முதலில் நீதிமன்றம் தீர்ப்பு என்ன என்பதை மும்மொழிகளில் பாராளுமன்றத்தில் வழங்க வேண்டும்.மக்களுக்கும் அறிந்துகொள்ள இடமளிக்க வேண்டும்.  கடந்த காலங்களில் நாட்டின் சில சம்பவங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற பலமாக அழுத்தம் நிலவியது. ஆனால் கடந்த 50 நாட்கள் அரசியல் சூழ்ச்சி குறித்து இலங்கை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலமாக சுயாதீன உள்ளக நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உருவாகியுள்ளது. இலங்கையின் பிரச்சினைகளுக்கு இலங்கை நீதிமன்றம் தீர்வுகளை நடுநிலையாக பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41