அரசியல் நெருக்கடி சர்வதேசத்தில்  இலங்கைக்கு  தாக்கம்  செலுத்தியது -  சம்பிக்க ரணவக்க

Published By: Daya

21 Dec, 2018 | 02:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 நாட்டில் கடந்த 51  நாட்களாக இடம் பெற்ற அரசியல்  நெருக்கடி சர்வதேச  அரங்கில்  தாக்கம்  செலுத்தியது.    பல  பாரிய அபிவிருத்திகளுக்கு  சர்வதேசமே  தடையினை விதித்தது.  கடந்த அரசாங்கத்தில்  இழுப்பறி  நிலையில்  காணப்பட்ட  அபிவிருத்தி செயற்திட்டங்களை  நாங்கள் குறுகிய  காலத்திற்குள் முழுமைப்படுத்தினோம்.  என பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாரிய அபிவிருத்திகள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி  அமைச்சின் பொறுப்புக்களை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் சூழ்ச்சிகளை நாங்கள்  கடந்த  51  நாட்களாக பாரிய போராட்டத்தின் மத்தியில் போராடி  தற்போது  பெற்றுள்ளோம். மீண்டும் பாரிய நகர  அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு  கிடைத்துள்ளமை  மகிழ்ச்சிக்குரியது.  அரசியல்  நெருக்கடியின்  காரணமாக  பல அபிவிருத்திகள் இன்று தடைப்பட்டுள்ளது.  சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் தனித்து செயற்பட  முடியாது.

 அரசியலமைப்பிற்கு முரணாக அரசாங்கத்தை அமைத்து ஒரு  திட்டத்தை  நீக்கி  எரிபொருளின்  விலையினை குறைத்தால் மக்களின்  நன்மதிப்பினை பெற்று விட முடியாது.  நாட்டு  மக்கள் தற்போது அரசியல்  ரீதியில் தெளிவான   நிலைப்பாட்டிலே  உள்ளார்கள்.  எவரும்  கீழ்த்தரமாக விலைபோகமாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46