அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.
புதிய அமைச்சரவையின் செயலாளர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சரவையில் பதவி கிடைக்காத சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக போராட உள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு - செலவு திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். அதனை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியுள்ளதாகவும் இது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது இடைக்கால வரவு - செலவு திட்டம் சமர்பிக்கப்படலாம் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்யை தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM