உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உடற்கட்டழகு போட்டியில் வெற்றிபெற்ற நுவரெலியா புஸல்லாவையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ 10 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இன்று காலை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சஜித் பிரேமதாஸ, தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தாய்லாந்தின் சியாங் மாய் நகரத்தில் அண்மையில், இடம்பெற்ற உலக உடற்கட்டு, உடல்வாகு விளையாட்டு சம்மேளனத்தின் 10 ஆவது உலக சம்பியன்ஷிப் போட்டிகள் இடம்பெற்றன.
அதில் 100 கிலோகிராம் எடைக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் வெற்றிபெற்ற நுவரெலியா-புஸல்லாவையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜுக்கு 10 இலட்சம் ரூபாவை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM