வவுனியா தேக்கவத்தை பகுதியில் உள்ள பாழைடைந்த வீடொன்றில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே ஹெரோயின் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சில ஹெரோயின் பைக்கற்றுகளையும் பொலிசார் மீட்டுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM