பிரேசில் நாட்டை சேர்ந்த 76 வயதான ஜோ டெய்சீரா ஃபரியா ஒரு மதபோதகர். இவர் நோய்களை குறிப்பாக மன நோய்களை குணப்படுத்துவதாக கூறி வைத்தியம் செய்து வந்துள்ளார். எனவே இவரிடம் சிகிச்சைக்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் வந்துள்ளனர்.
சமீபத்தில் டச்சு புகைப்பட கலைஞர் ஒருவரும் சென்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் அந்த மதபோதகர் மனநோயாளிகளின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்வதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
இவரின் இந்த புகாருக்கு பின்னர் சுமார் 350 பெண்கள் மதபோதகர் தங்களை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொலிசார் அந்த மதபோதகரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
பின்னர், மதபோதர் அளித்த வாக்குமூலம் பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, குறித்த மதபோதருக்குள் 30 வைத்தியர்களின் ஆவிகள் உள்ளதாகவும், அதனால்தான் என்னால் பிறருக்கு சிகிச்சை அளிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை பலாத்காரம் செய்தது நான் அல்ல என்னுள் இருக்கும் வைத்தியர்களின் ஆவிகள் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்பது பொலிசாருக்கே தெரியாமல் குழப்பத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM