மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்று வேலை என்று தி.மு.க.வின் பொருளாளரும், சட்டப்பேரவையின் பொது கணக்கு குழுவின் தலைவருமான துரை முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
“குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரை பதவியில் விட்டுவைத்திருப்பது நியாயமல்ல.
கேரளத்தில் வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது வந்து பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நேரில் வரவில்லை. தமிழகம் மீதான மத்திய அரசின் அலட்சியத்தின் வெளிப்பாடே இது. நீர் மேலாண்மையில் தமிழக அரசு போதிய கவனம் செலுத்த தவறிவிட்டது. தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்திற்கு ஆண்டுதோறும் நூறு கோடி ரூபாயை பட்ஜட்டில் ஒதுக்குகின்றனர். ஆனாலும் பணிகள் ஏதும் நடக்கவில்லை.
மேக்கேதாட்டு அணை விவாகரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று கர்நாடக முதல்வர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தை என்பது ஏமாற்று வேலை. எந்த காரணத்தைக் கொண்டு பேச்சு வார்த்தை தேவையில்லை. சட்டப்படி என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே நடக்கவேண்டும்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM