இலங்கையின் லூசியன் புஷ்பராஜ் 10 ஆவது உலக கட்டழகராக தெரிவாகி வெற்றிபெற்று உலக சம்பியனானார்.
சாம்பியன்ஷிப்பின் உலக கட்டழகராக லூசியன் புஷ்பராஜ் நேற்று இரவு நாடு திரும்பினார்.
உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் டிசம்பர் 14 ஆம் திகதி ஆரம்பித்து 16 ஆம் திகதிவரை தாய்லாந்தின் பாங்கொக் நகரில் "சியாங் மாய்" இல் இடம்பெற்றது.
இப் போட்டியில் 52 நாடுகள் பங்குபற்றியதுடன் 600 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
சலக போட்டியாளர்களையும் தோற்கடித்து 100 கிலோ கிராம் நிறைகொண்ட பளுதூக்கி வெற்றியை லூசியான் புஷ்பராஜ் தனதாக்கி கொண்டார்.
”ஆசியாவின் கறுப்பு சிங்கம்” என்ற நாமத்தில் லூசியான் புஷ்பராஜ் விசேட வெற்றியினை தனதாக்கிக் கொண்டார். இலங்கை விளையாட்டு வீரரினால் இலங்கைக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது விசேட அம்சமாகும்.
குறித்த வெற்றிக்கான கிண்ணத்தை பெற்று கொண்டு நேற்று இரவு 10.50 மணியளவில் தாய்லாந்து பாங்கொக் நகரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய லூசியான் புஷ்பராஜை வரவேற்பதற்காக மனைவி, பிள்ளைகள் உட்பட பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், இலங்கை பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் இலங்கை உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு கட்டுப்பாட்டு சம்மேளனத்தின் ஏனைய அதிகாரிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தின் விசேட விருந்தினர் மத்தியில் மிகுந்த வரவேற்பு மத்தியில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM