மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 ஐ தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் இருந்து அதன் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்க மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், இன்று புதன்கிழமை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று புதன் கிழமை 119 ஆவது நாளாக இடம் பெற்றது.
தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன்கிழமை ஆகிய இரு தினங்களிலும் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்கு அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த புதைகுழியை பார்வையிட உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலர் வருகை தருகின்றனர். ஆனால் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியின்றி குறித்த பகுதியைப் பார்க்க அனுமதி வழங்கப்பவில்லை.
குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணை முடியும் வரை எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்புப் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதவான் முன்னிலையில் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
நீதிமன்றம், விசேட சட்டவைத்திய அதிகாரி குழு, தொல்பொருள் திணைக்களம், பெறுப்பான அரச திணைக்களம், பொலிஸ் நிலையம், குற்றவியல் பொலிஸார் ஆகியோர் இணைந்து தற்போது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 6 பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவற்றில் தற்போது 2 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM