இலங்கையில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதை வரவேற்றுள்ள பிரிட்டன் இலங்கையின் நீதித்துறையினதும் ஜனநாயக ஸ்தாபனங்களினதும் நெருக்கடியிலிருந்து வேகமாக மீள்வதற்கான திறனையும் பாராட்டியுள்ளது.
பிரிட்டனின் ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு அமைதி தீர்வை காணும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ள மார்க்பீல்ட் தற்போது காணப்பட்டுள்ள தீர்வு இலங்கையின் நீதித்துறையினதும் ஜனநாயக ஸ்தாபனங்களினதும் நெருக்கடியிலிருந்து வேகமாக மீள்வதற்கான திறனிற்கு சிறந்த உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையின் நெருங்கிய சகாவாகவும் நட்பு நாடாகவும் விளங்கும் என குறிப்பி;ட்டுள்ள மார்க்பீல்ட் பேண்தகு பதிலளிக்கும் கடப்பாட்டை கொண்ட இலங்கையின் சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சி, மற்றும் நல்லாட்சியில் முன்னேற்றம் காண்பது மனித உரிமைகளை பாதுகாப்பது போன்றவற்றிற்கு உதவவும் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM