ஓமந்தை,எனது இரண்டு மகன்களை ஷெல்வீச்சில் பலி கொடுத்த நான் மகளையும் காணாமல் தவிக்கின்றேன் என சிவபாதம் செல்வராணி என்ற தாயார் காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் நேற்று கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற காணாமல்போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு அவர் சாட்சியமளிக்கையில்
நானும் என் கணவரும் 05 பிள்ளைகளுடன் எனது சொந்த ஊரான நெல்வேலிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றோம். விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணும் நடத்திய யுத்தத்தின் உக்கிரத்தால் இடம் பெயர்ந்த நாம் அங்காடிகள் போல் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்காலை அடைந்தோம். அங்கு எமது உயிரை பாதுகாக்க எண்ணிய போதும் செல் தாக்குதலில் அகப்பட்டு என் இரு ஆண் பிள்ளைகளை இழந்தேன்,
செல் வீச்சில் சிதறிய என் பிள்ளைகளை எண்ணி அழுவதா என் ஏனைய பிள்ளைகளை காப்பதா என்ற மரண போராட்டத்தின் மத்தியில் என் எஞ்சிய பிள்ளைகள் மற்றும் சகவீனமான என் கணவருடன் உக்கிர செல் அடியிலும் உயிரை காக்க முற்பட்டேன்.
இந் நிலையில் நாம் ஒடிய போது செல் உக்கிரத்தில் என் குடும்பம் சிதறடிக்கப்பட்டு இறுதியாக எல்லோரும் இணையும் போது என் மகளை தவறவிட்டு விட்டேன்.
என் மகள் என்னிடத்தில் வந்து சேர்வாள் என்றெண்ணி நந்திக்கடலின் மிதந்து கிடக்கும் சிறு குழந்தைகள் மற்றும் ஏனைய உடல்களின் நடுவில் சிறு மண் திட்டில் ஒர் இரவிலும் பகலிலும் காத்திருந்தும் பயனில்லாமல்போய் விட்டது.
என் மகள் திரும்பி வர மாட்டாளா என்றெண்ணி ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன், தற்போது எனக்கு நெஞ்சு நோய் ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM