வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5 ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற வாகனம் செட்டிகுளம் தபால் நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது அவ்வீதி வழியே மாடுகளை கலைத்துசென்ற வயோதிப்பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம் பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில்படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றபட்டார். தொடர்ந்துசிகிச்சை பெற்றுவந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றபட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று(16) அதிகாலை குறித்த பெண்மரணமடைந்துள்ளார். விபத்தில் பெரியசாமி செவனை என்ற மூதாட்டியே மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM