நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை திரும்ப வழங்காமையால் மனவிரக்தி அடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த உ.ஐங்கரன் (வயது 31) என்ற இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் கைமாற்றாக வழங்கியுள்ளார்.
அப்பணத்தை மீள தருமாறு கடந்த சில நாட்களாக ஐங்கரன் கோரி வந்த நிலையில் பணத்தை கடனாக பெற்ற நண்பர் பணத்தை வழங்காது இழுதடிப்பு செய்துள்ளார்.
இதனால் மனவிரக்தியடைந்து பணம் கொடுத்த ஐங்கரன் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் களைநாசினியை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM