மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (13-12-2018)மாலை இடம்பெற்றுள்ளது.
பசு மாடு ஒன்றினை திருட்டுத்தனமாக வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கியபோது பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் தேடுதல் மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த மாட்டிலிருந்து பெறப்பட்ட இறைச்சியையும், எச்சங்களும் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிவித்து இருவர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு பொது மக்களின் மாடுகள் கடத்தப்படுவதும், சட்டவிரோதமான முறையில் இறைச்சிகளாக்கப்படுவதும் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM