உலகம் முழுவதும் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக 90,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், 160 மில்லியன் மக்கள் பேரிடர் காலத்திற்கு பிந்தைய ஆரோக்கிய சீர்கேட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.
அத்துடன் பேரிடர் காலத்திற்கு பின் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடு குறித்த விழிப்புணர்வு வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் ஏற்பட்ட கஜ புயலின் காரணமாக, புயலுக்கு பின்னர் அப்பகுதிகளில் சுற்றுப்புறத்தை சீரழிந்து விடுவதால் ஏராளமான வைரஸ் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிவிடுகின்றன. நீரும் அசுத்தமடைவதால் நீரின் வழியாகவும் கிருமிகள் பரவுகின்றன.
காலரா, டைபாய்ட், மஞ்சள்காமாலை, டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் தாக்குதல் ஏற்படுகின்றன. இதனை உரிய காலத்தில் கண்டறிந்து தடுக்கவேண்டும். பாதிப்படைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து காப்பாற்றப்படவேண்டும்.
இத்தகைய காலகட்டங்களில் மருந்துகளும், மாத்திரைகளும் சிகிச்சைகளையும் விட மக்களை உளவியல் ரீதியாக மேம்படுத்துவதே சவாலான பணியாகும். இதனை மருத்துவ ஊழியர்கள் திறம்பட மேற்கொண்டு களப்பணியாற்றவேண்டும்.
மக்களும் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களுக்கு ஏற்பட்ட ஆரோக்கிய சீர்கேடு குறித்து முறையான விவரங்களை வைத்தியர்களிடம் தெரிவித்து, சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு குணமடையவேண்டும்.
டொக்டர் பாக்யராஜ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM